“தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத் தொகுப்பை நடைமுறைப்படுத்தக் கூடாது” – டி.ராமச்சந்திரன்

Share

முதல்வர் நடித்த ‘சிவகாசி’ மற்றும் ‘கத்தி’ திரைப்படங்களை சுட்டிக்காட்டி, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய அவர், ‘சிவகாசி’ திரைப்படத்தில் பெண்கள் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சுரண்டல் குறித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ‘கத்தி’ படத்தில் விவசாயிகளுக்காக குரல் எழுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தொழிலாளர்களுக்கு ஆதரவாக முடிவு எடுக்க வேண்டும்

“சிவகாசி போல கத்தி போல முதல்வர் நடித்த சிவகாசி திரைப்படத்தை பார்த்தேன். எவ்வாறு பெண்கள் தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள் என்பதை சொல்லி இருக்கிறார்” என டி.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

மேலும், பட்டறை தொழிலாளியாக தொழிலாளர் நியாயங்களுக்காக முதல்வர் தட்டிக் கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பின்னணியில், தொழிலாளர்களுக்கு எதிரானதாக கருதப்படும் சட்டத் தொகுப்பை நடைமுறைப்படுத்த மாட்டோம் என தமிழக அரசு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய கோரிக்கை

தொடர்ந்து ‘கத்தி’ திரைப்படத்தையும் குறிப்பிட்ட டி.ராமச்சந்திரன், அந்தப் படத்தில் விவசாயிகளுக்காக முதல்வர் குரல் எழுப்பியிருப்பதாக கூறினார்.

அதன் அடிப்படையில், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் தொடர்பான பிரச்சினைகளில் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ள கருத்துகளை சுட்டிக்காட்டி, நடைமுறை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே தனது கோரிக்கை என டி.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *